Show all

ராஜபக்சே போதையேறிய, சிறிசேனா திருந்தினால் மட்டுமே இலங்கையில் தீர்வு! குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா போல

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா, தானாக ஞானோதயம் வந்து திருந்த வேண்டும், அல்லது ஊரில் அடிபட்டு அறிவு வந்து திருந்த வேண்டும். வேறு வகையாக அந்தக் குடும்ப மீட்சிக்கு எதுவும் தீர்வு இல்லை.

அந்த வகையாகத்தான் இருக்கிறது இலங்கையின் நிலை. ராஜபக்சே என்கிற அரசியல் அகதியால் போதையேற்றப் பட்ட மைத்திரிபால சிறிசேனா, ஓரளவுக்கு நன்றாகவே போய்க்கொண்டிருந்த அரசாங்கத்தை கலைத்து இலங்கையில் குழப்பத்தை விதைத்தவர். 

சிறிசேனா தான் தன் தவறை உணர்ந்து, ரணிலிடம் மன்னிப்புக் கோரி, சிறிசேனவிற்கு போதையேற்றிய குழப்ப வணிகர் ராஜபக்சேவை அப்புறப் படுத்தி, இலங்கையில் குழப்பம் தீர வழிகாண வேண்டும். விடிந்தும் போதை தீராத குடிகாரனாய், போதையேற்றிய ராஜபக்சேவின் தோளில், சிறிசேனா சாய்ந்து கொண்டிருந்தால் குழப்பம் தீரவே தீராது. 

அல்லது பக்கத்து நாடாக இருக்கிற இந்தியாவாவது,  போதையில் இருக்கிறவனை நாலு மிதி மிதித்து, பத்து குடம் தண்ணீரை ஊற்றி போதைக்காரனைத் திருத்தலாம். இவனும் ஹிந்துத்துவா போதையில், பணமதிப்பிழப்பு, எரிபொருள் விலையேற்றம் என்று சொந்த மக்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிற போதைக்காரனாக இருக்கிற போது, அடுத்த போதைக்காரனின் அட்டூழியங்கள் இவனுக்கு சுவரசியமே தரும்.

உலக நாடுகளும் இலங்கை விசயத்தில் உருப்படியாக ஒன்றும் முன்னெடுக்காத நிலையில், பாராளுமன்றத்தை நடத்த தேர்வுக்குழுவை அமைப்பது என இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.