Show all

பின்னப் பட்டு வருகிறது! ரணில் விக்கிரம சிங்கேவை பிணைக்க: பயங்கரமான, தப்பிக்கமுடியாத சூழ்ச்சி நிறைந்த நம்ப முடியாத அதிரடி சதிவலை

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சேவைக் கொலை செய்வதற்கு சதி நடப்பதாக கூறப்பட்டு பின் மறைக்கப் பட்டது. இது இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக வீழ்த்துவதற்கும், இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் ராஜபக்சேவிடம் ஒப்படைப்பதற்கும் பின்னப் பட்ட சதி வலையென்று தெரிவிக்கப் படுகிறது. 

ரணில் விக்கிரம சிங்கே மீது கொலை முயற்சிப் பழியை சுமத்தி அதிரடியாக கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதை ரணில் விக்கிரம சிங்கே கண்டு கொண்டதால், நகர்வுகளை மாற்றி, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் என்கிற இந்த மென்மைப் போக்கு கடைபிடிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சேவைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இருப்பதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குனர் நாமல் குமார திட்டமிட்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

தன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் அதிமுதன்மையான பிரபலம் ஒருவர் இருப்பதாகவும் அவரின் பெயரை வெளியிட்டால் முழு நாடும் அதிர்ச்சி அடையும் என்று  மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை இந்த நோக்கம் பற்றியதாக இருக்கும் என்று தெரிவிக்கப் படுகிறது.

மைத்திரிபால சிறிசேனா, ராஜபக்சே வகுத்துத் தரும் திட்டப் படி செயல்பட்டு வருவதால், ரணில் விக்கிரம சிங்கே மீது பாயும் நடிவடிக்கை பயங்கரமானதாகவும், தப்பிக்க முடியாத சூழ்ச்சி நிறைந்ததாகவும். நம்ப முடியாத அதிரடிகளாகவும் இருக்கும் என்று இலங்கை அரசியல் வட்டாரத்தில் கருதுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.