Show all

தமிழ்இனத்தில் பரவும், அயல் அடிமைத்தனத்தில், இதுவொரு வகை!

நாவலந்தேயம் என்று பொருள்பொதிந்த தலைப்பில், தமிழ்முன்னோர் கட்டிக்காத்து வந்த மண்ணில், தமிழ்த்தொடரண்டு 1400 தொடங்கி நடப்பு 5126வரை பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், பல்வேறு மதங்கள், மார்க்சியம், திராவிடம் என்று பல்வேறு அயல்இயல்களுக்கு தமிழ்மக்களில், அடிமையான சிலரால் முன்னெடுக்கப்பட்ட அயல் அடிமைத்தனம் பற்றியதும், நடப்பில் நடைமுறையில் உள்ளவொரு வகை அடிமைத்தனம் தந்த பாதிப்பு குறித்தும் விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:

நாவலந்தேயம் இந்தியாவாக மாற்றப்பட்டு வடமண்ணில் பாரதம் என்று நிறுவப்பட்டு, 
1.அசாமியம் 2.வங்காளம் 3.ஆங்கிலம் 4.ஹிந்தி 5.உருது 6.ஒரியம் 7.கன்னடம் 8.கசுமீரியம் 9.குசராத்தியம் 10.கொங்கணியம் 11.சந்தாளியம் 12.சமசுகிருதம் 13.சிந்தி 14.தெலுங்கு 15.நேபாளியம் 16.பஞ்சாபியம் 17.போடோயம் 18.மணிப்புரியம் 19.மராத்தி 20மலையாளம் 21மெய்தி என்கிற இருபத்தியோரு மொழிகளும் மொழியினங்களும் உருவாகக் காரணம் ஆகியுள்ளார்கள்.

தமிழ்த்தொடரண்டு 1400 தொடங்கி நடப்பு 5126வரை பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், பல்;வேறு மதங்கள், மார்க்சியம், திராவிடம் என்று பல்வேறு அயல்இயல்களுக்கு தமிழ்மக்களில், அடிமையான சிலர்.

சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இருக்கிறது. இந்த பூங்கா பேணுனராக இருக்கும் ரகுவின் மகள் வழக்கம்போல பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 ராட்வீலர் நாய்கள் சிறுமியை சரமாரியாக கடித்த குதறியிருக்கின்றன. 

அயல் அடிமைத்தனத்தில், புதிய வகையாக அயல்இன நாய்கள் வளர்க்கும் ஒருவர், தான் வளர்க்கும் இரண்டு நாய்களை, நான்கு நாட்களுக்கு முன்பு, குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட அந்தப் பூங்காவுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த 5 அகவை சிறுமியை, அந்தப் புதுவகை அயல் அடிமையின் வளர்ப்பு நாய்கள் இரண்டும் தாக்கி, சிறுமியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபேணல் மற்றும் பால்வளத்துறை 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, 
1. பிட்புல் டெரியர் 2. தோசா இனு 3. அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர் 4. பிலா ப்ரேசிலேரியா 5. டோகா அர்ஜென்டினா 6. அமெரிக்கன் புல் டாக் 7. போயர் போயல் 8. கன்கல் 9. சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக் 10. காக்கேஷியன் ஷெபர்டு டாக் 11. சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக் 12. டோன் ஜாக் 13. சர்ப்ளேனினேக் 14. ஜாப்னிஸ் தோசா 15. அகிதா மேஸ்டிப் 16. ராட்வீலர்ஸ் 17. டெரியர் 18. ரொடீசியன் ரிட்ஜ்பேக் 19. உல்ப் டாக் 20. கேனரியோ அக்பாஸ் டாக் 21. மாஸ்கோ கார்ட் டாக் 22. கேன்கார்சோ 23. பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் வன்முறையானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிட்டுள்ளது. 

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும். இனப்பெருக்கம் செய்வதற்கும். வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக இணைப்பு சங்கிலி மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும். 

அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம் இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை அணிவித்து நாய் வளர்ப்பவர்கள் வெளியே அழைத்துச் செல்வது, பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும் என தெரிவித்திருக்கிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,975.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.