Show all

நிலவுப்பயணம் மீண்டும் தள்ளி வைப்பு! நேற்று இரவு 11.47 மணிக்கு 3 மனித பொம்மைகளை நிலவுக்கு அனுப்பவில்லை அமெரிக்காவின் நாசா

அமெரிக்காவின் நாசா அனுப்பும் நிலவுப்பயண விண்கலன் இந்திய நேரப்படி இன்று இரவு 11.47 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட இருந்தது. ஆனால் இரண்டாவது முறையாக இந்த முன்னெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. 

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்காவின் நாசா அனுப்பும் நிலவுப்பயண விண்கலனில், நீர்வளி எரிபொருள் நிரப்பும்போது ஏற்பட்ட கசிவின் காரணமாக இரண்டாம் முயற்சி கைவிடப்பட்டது. அடுத்த முயற்சி இந்த மாதம் இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

53 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான சோதனையில் நாசா இறங்கி செயல்பட்டு வந்தது. மனிதர்கள் நீண்டநாள் நிலவில் வாழும் சூழலை ஏற்படுத்தவும், சோதனைகளை செய்யவும் ஆர்டெமிஸ் 1 என்ற ஆளில்லா விண்கல சோதனையை முன்னெடுக்க நாசா செய்ய திட்டமிட்டு இருந்தது.

முதல் முறை முயற்சி நிறுத்தத்திற்கு சொல்லப்பட்ட காரணங்கள் களையப்பட்டு நேற்று அதே ஏவுதளத்தில் இந்திய நேரப்படி இரவு 11.47 மணி அளவில் ஏவ இருப்பதாக நாசா தெரிவித்தது. ஆனால் ஏவுவதற்கு முன் அதில் நீர்வளி எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் கசிவுகளை கண்டறிந்தனர். சரி செய்ய எவ்வளவு முயன்றும் முழுமையாக சரி செய்ய முடியவில்லை. அதனால் இந்த இரண்டாவது முயற்சியும் கைவிடப்பட்டது.

நாளை அல்லது நாளை மறுநாள் விண்கலத்தை ஏவுவதற்கு காலநிலை சரியாக உள்ளது. ஆனால் அதற்குள் விண்கலத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்ய இயலாது என்று நாசா குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி முகவாண்மையின் கூற்றுப்படி, அடுத்த ஏவுதல் இன்னும் இரண்டு கிழமைகள் கடந்தே அல்லது அடுத்த மாதத்தில் இரண்டு கிழமைகள் கடந்தே உள்ள காலத்தில் நடைபெறலாம். விண்கலம் இப்போது அதன் கட்டுமான தளத்திற்கு மீண்டும் எடுத்துச்செல்லப்படும். அங்கு இந்த விண்கலத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். எல்லாம் சரி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் நிலவுக்கு ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.

ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உண்மையிலேயே அமெரிக்கா- அப்பல்லோ பதினொன்றை நிலவுக்கு அனுப்பியிருந்திருக்குமா? அல்லது புவியில் முன்னெடுக்கப்பட்ட படபிடிப்புதானா? என்பதான ஐயவினாக்களும் மீண்டும் நடப்புக்கு வந்திருக்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,361.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.