Show all

அதிர்ச்சியில் கொலைக் குற்றவாளி! கொலை செய்யப்பட்ட பெண் திரும்பிய அதிசயம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது, நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உயிருடன் வந்துள்ளார். 

அஸ்மாவின் முதல் கணவர் இபார் அஹமது இதுகுறித்து காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளார்.

இபார்தான் அஸ்மாவை கொன்றார் என்று ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அஸ்மா உயிருடன் திரும்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் வசித்து வரும் அஸ்மாவிற்கும், இபாருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் நடந்ததில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் ஓராண்டு இடைவெளியில் அஸ்மா மர்மமான முறையில் காணாமல் போனார்.

அஸ்மா கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறி இபார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அறங்கூற்று மன்றம் மூலம் அஸ்மாவின் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில் அஸ்மாவின் தந்தை இபாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர் கொடுத்த புகாரை திரும்ப பெற்றார். அஸ்மா இறந்த வழக்கும் அப்படியே முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின் அஸ்மா, நீலம் என்று பெயரை மாற்றிக் கொண்டு மீண்டும் அவர் ஊருக்கே வந்துள்ளார். தன்னுடைய முன்னாள் காதலன் நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார். அவர்கள் துபாயில் இவ்வளவு ஆண்டுகள் வசித்துள்ளனர். 

அந்தப் பெண்ணுக்கு 6 குழந்தைகள் வேறு பிறந்துள்ளன. தற்போது இந்த பெண்ணின் மீது கணவனை ஏமாற்றுதல், முறையற்ற இரண்டாவது திருமணம் என்ற நிறைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதல் திருமணத்திற்கு முன்பே நசீரை காதலித்ததாக அஸ்மா கூறியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,745.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.