Show all

அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பியது உண்மையா! அப்போதிருந்தே புகைந்து கொண்டிருந்த ஐயத்தை, ஏரியூட்டியுள்ளது ரஷ்யா

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் தொடர் ஆண்டு 5071ல் ஆடிமாதம் ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று (20.07.1969) ஒட்டு மொத்த உலகத்தையே பரபரப்பாக்கியது அமெரிக்கா! 

நிலவில் முதன் முதலாக இறங்கினார் நீல் ஆம்ஸ்ட்ராங். என்று அப்போதிருந்த குறைந்த ஊடக வசதிகளோடு உலகம் முழுவதும் செய்தி பரப்பியது அமெரிக்கா.

கடந்த நூற்றாண்டில் மனிதன் செய்த மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகி விட்டது. அவ்வளவுதான் அதன் பிறகு சோவியத் யூனியனும், மற்ற உலக நாடுகளும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மறந்தே விட்டன. 

அமெரிக்கா உண்மையில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவில்லை, அந்தக் காட்சிகள் அனைத்தும் பூமியில் படம் பிடிக்கப்பட்டவை என்பது நிலவுப் பயணத்தைப் பற்றி நீண்டகாலமாக இருக்கும் ஒரு ஐயப்பாடுகளில் முதன்மையானது ஆகும். இந்தச் சந்தேகம் சிலருக்கு உண்டு என்றாலும் அது ரஷ்யாவிற்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இதுபற்றி தொடக்கம் முதலே கேள்வி எழுப்பி வருகிறது ரஷ்யா. அமெரிக்காவில் கூட இன்னும் சிலர் அது பொய்யானது என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல்வேறு கள ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. இத்தனைக்கும், இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் கூட வெளியிட்டுள்ளது அமெரிக்கா. அதன் பிறகும் கூட இதை நம்பாதவர்கள் உண்டு.

இந்நிலையில் இது பற்றி மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார் ரஷ்யாவின் தேசிய விண்வெளி நிறுவனத்தின்  தலைவரான டிமிட்ரி ரோகோஸின் கடந்த சில நாள்களுக்கு முன்னால் மால்டோவா நாட்டின் அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் காணொளியை கீச்சுப் பக்கத்தில் டிமிட்ரி ரோகோஸின் வெளியிட்டுள்ளார். அதில், 'அவர்கள் உண்மையாகவே நிலவுக்குச் சென்றார்களா இல்லையா என்பதை ஆராய வேண்டும், அதுவே எங்கள் விருப்பம் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கிண்டலான தொனியில் பேசியிருந்தாலும் சோவியத் யூனியனில் பிரிவு ஏற்பட்டுப் பல காலத்திற்குப் பிறகும் கூட நிலவுப் பயணத்தை அவர்களால் மறக்க முடியவில்லை என்பதற்;கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த நிகழ்வு. கொஞ்சகாலம் அமைதியாக இருந்த ஐயப்பாட்டு நெருப்பை மீண்டும் பற்ற வைத்திருக்கிறது ரஷ்யா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,984.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.