Show all

மீண்டும் தொடங்கியது மைத்திரிபால சிறிசேனவின் அடவடி! போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிப்பு

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முதன்மையானதாக காணப்படும் இந்த தருணத்தில், போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவத் தளபதியாக்கும் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், அறங்கூற்று மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக, போர்க்குற்றப்புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமித்து, இலங்கையில் மீண்டும் தனது அடவடியைத் தொடங்கியுள்ளார் குடிஅரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன.  
மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், குடிஅரசுத் தலைவர் செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக குடிஅரசுத் தலைவர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், ஷவேந்திர சில்வா மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிகை செய்யப்பட்டிருந்தது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் அறங்கூற்றுக்கான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்படி, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது, தமிழர்களை அவமதிக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

யுத்தக் குற்ற மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை குடிஅரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதானது, தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் எனவும், இந்த நியமனம் வழங்கப்பட்டமையினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தாம் அதிருப்தியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இராணுவ தளபதியாக போர்க்குற்றப் புகார்-  மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

இராணுவ தளபதியாக போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் மூலமாகக் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும், நம்பகமானதும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

போர்க்குற்றப் புகார்- மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, குடிஅரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன, புதிய இராணுவ தளபதியாக நியமித்தமையானது, யுத்தத்தின் போது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையாக குறைபாடாகவே கருதுவதாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை தெரிவிக்கிறது.

'யுத்த குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய குடிஅரசுத்தலைவர் கூறியுள்ளதாக' அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது.

கடந்த முறை குடிஅரசுத்தலைவர் தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு நடுவிலேயே குடிஅரசுத்தலைவராக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர் என்றும், சர்வதேச ரீதியில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை, சர்வதேசத்திற்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அவைக்கும் விடுத்துள்ள அறைகூவலாகவே கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,250.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.