சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் பல முக்கிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுவர்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 78 பெரியவர்களும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.