Show all

வெடிகுண்டு தகவலால் துருக்கி விமானம் தரை இறக்கம்

துருக்கி விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்ததால், டெல்லியில் அவசர அவசரமாக தரை இறக்கி சோதனை போடப்பட்டது. நேற்று ‘ஏர்பஸ்-330’ ரக துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 134 பயணிகள், 14 சிப்பந்திகள் என 148 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம், இந்திய பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கழிவறையில் உள்ள முகம் பார்க்கிற கண்ணாடியில் உதட்டுச்சாயம் கொண்டு, ‘இந்த விமானத்தின் சரக்கு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த விமானம் சரியாக மதியம் 1.41 மணிக்கு அங்கு பத்திரமாக தரை இறங்கியது. அதில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.