Show all

தா.பாண்டியன் சகோதரரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய இருவர் கைது

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மாவட்டம், திருமங்கலம் சியோன்நகரை சேர்ந்தவர் சுதாகரன் அகவை 45. இவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் சகோதரர் ஆவார்.

சில ஆணடுகளுக்கு முன்பு திருமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் கனி, சையது ஆகியோரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதற்கு ரூ.5 லட்சமாக திருப்பி கொடுத்துவிட்டேன்.

ஆனாலும் அவர்கள் இன்னும் அசல் பாக்கி உள்ளது. அதனை செலுத்து வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கனி, சையதுவை கைது செய்தனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.