Show all

இந்தமுறை உறுதியாக இராதாகிருட்டினன்நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றே கருதப்படுகிறது

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் இராதாகிருட்டினன்நகர் தொகுதிக்கான தேர்தல் நாளைத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

      அதன்படி இராதாகிருட்டினன்நகர் தொகுதிக்கு 06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (21.12.2017) இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு பதிகை வரும் 11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (27.11.2017) தொடங்குகிறது.

      தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையைத் தொடங்கி உள்ளன. இந்த தேர்தலில் (தன் நிரந்தர அடிமைக் கட்சியாக இயங்கும்) தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.

      கடந்த தேர்தலைப் போலல்லாமல் இந்தத் தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க.,  தினகரன் கட்சி என மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      கடந்த 30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5118 (12.04.2017) இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப் பட்டுவாடா செய்ததான காரணத்தை முன்னிறுத்தி கடைசி நேரத்தில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்த முறை பணப் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்;;டும் என்ற கருத்து இருந்தாலும்,

      இந்தமுறை எந்தக் காரணமும் காட்ட வேண்டிய தேவை எழாது உறுதியாகத் தேர்தல் நடத்தப் படும் என்றே கருதப்படுகிறது.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.