Show all

அறங்கூற்றுவரை முகநூலில் விமர்சித்தமைக்காக, பெண் சிறையில் அடைப்பு

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரனை விமர்சித்து முகநூலில்; கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மகாலட்சுமி. சமீபத்தில் ஆசிரியர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரன் ஆசிரியர் அமைப்பு போராட்டம் குறித்து சில கேள்விகள் எழுப்பினார்.

இது தொடர்பாக அறங்கூற்றுவர் கிருபாகரனை விமர்சித்து மகாலட்சுமி தனது முகநூலில் ஆட்சேபணைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தாராம். இது பற்றிய புகாரின் பேரில் வேலூர் சத்துவாச்சேரி காவல்துறையினர் மகாலட்சுமியை கைது செய்து அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தினர்.

அவரை 15 நாள் அறங்;கூற்றுமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் உத்தரவிட்டதன் பேரில் மகாலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டாராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,613

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.