Show all

குடிப்பகம்.நாகராஜன் குடிப்பகம் பொதுமக்களால் அடித்து நொறுக்கப் பட்டது! காவல்துறை விசாரணை நடந்து வரும் நிலையில்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி இருபதுக்கு மேலான நபர்கள் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிற அயோக்கியர் குழுவினருக்கு ஆதரவாக: 

இந்தப் பொள்ளாச்சி அயோக்கியர்கள் குழுவினரின் காணொளி விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்திருக்கும் அதிமுக பிரமுகர்  குடிப்பகம்.நாகராஜனுக்குச் சொந்தமான குடிப்பகம் பொதுமக்களால் அடித்து நொக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் முகநூல் கணக்கில் இருக்கிற சில அப்பாவி பெண்களை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி, காணொளி வலையில் சிக்க வைத்து குற்றம் புரிந்த அயோக்கியர்கள் குழுவினரின் அயோக்கித்தனத்தால் தமிழக மக்களை  பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில்: காவல்துறையினர் இது தொடர்பான குற்றவாளிகள் நான்கு பேர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். 

தமிழக காவல்துறை விசாரித்துக்கொண்டிருந்த இந்த வழக்கு, தற்போது சிறப்பு புலனாய்வு காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. 

இதில், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்த வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. 

இந்நிலையில், பொள்ளாச்சியிலிருந்து ஆழியாறு செல்லும் வழியில் கோட்டூர் சாலையில் அமைந்திருந்த குடிப்பகம்.நாகராஜனுக்குச் சொந்தமான குடிப்பகத்தை இன்று கோட்டூர் பொதுமக்கள் ஆவேசத்தோடு அடித்து நொறுக்கினர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்திருக்கும் அதிமுக பிரமுகர்  குடிப்பகம்.நாகராஜனுக்குச் சொந்தமான குடிப்பகம் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.