Show all

4 மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தா செயல்பட தடை

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா 4 மடங்களின் மடாதிபதியாக செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அவர் சாரதா நிகேதன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சாத்துக்கள் மடம், பாலுசாமி மடம், அருணாச்சல தேசிய மடம் மற்றும் சங்கர மடம் ஆகியவற்றின் இளைய மடாதிபதியாக கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்றார். ரூ.2 கோடி நன்கொடையாக அளித்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றதாக கூறப்படுகிறது.

 

அத்துடன் மடாதிபதியாக செயல்பட்டு வந்த ஆத்மானந்தாவுக்கு எதிராகவும் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தடை உத்தரவு பெற்றிருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆத்மானந்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த பி.ஆர்.சிவக்குமார் 4 மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தா செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.