Show all

வீராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றிய கேள்விக்கு கோபத்தில் கொந்தளிப்பு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீரராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று சுற்றித் திரிந்தனர். வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் கோலியுடன் ஜோடியாக வெளியே சுற்றினர். நியூசிலாந்து நாட்டில் இருவரும் கைகோர்த்தப்படி திரிந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.   இது தொடர்பாக கோலி பல முறை  பத்திரிகையாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து உள்ளார்.

 

2015 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கூட அவரது ஆட்டத்தை ரசிக்க அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அனுஷ்கா சர்மா இவ்வாறு கோலி போட்டியில் கலந்து கொள்ளும் இடங்களுக்கு செல்வதால் அவரது ஆட்ட திறன் பாதிக்கப்படுவதாக கூட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

வீராட் கோலி ரன் குவிக்க முடியாமல் போனால் அதற்கு அனுஷ்கா சர்மா மைதானத்துக்கு வருவதுதான் காரணம் என்று ரசிகர்கள் கிண்டலடித்தனர். ஆனால் இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருவரும் தீவிர காதலில் இருந்தனர்.

 

ஆனால் திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் காதலை முறித்து கொண்டு பிரிந்து விட்டனர். இந்த நிலையில் மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கோலி பங்கேற்றார்.  அந்த நிகழ்ச்சியில்  ஆடம்பரக் கைக்கடிகார நிறுவனம் ஒன்றின் இந்தியாவின் விளம்பர தூதராக அறிவிக்கபட்டார். அவரிடம் அப்போது அவரது  காதல் குறித்துதான்  பெரும்பாலான நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

 

வீராட் கோலியிடம் அனுஷ்கா சர்மா பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.  இதனால் கோலி கோபத்தில் கொந்தளித்து விட்டார். அவர் கூறும்போது, இது எந்த மாதிரியான கேள்வி. நீங்கள் என்னிடம் தவறான கேள்வியை கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

 

மேலும் அவர் கூறுகையில், சில நேரம் மைதானத்தில் எனது எல்லையை மீறி இருக்கிறேன். ஒருமுறை தவறு செய்தால் அதிலிருந்து பாடம் கற்று வருகிறேன். தவறுகளை திருத்தி கொள்ளவே விரும்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.