Show all

‘தமிழ்அறநிலையத்துறை’யும், தமிழக அரசும், உடனே முனைக! ஹிந்துத்துவாவை கோயில்களிலிருந்து விரட்ட

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் திருமண மேடைகளும், கோயில்களும் அவ்வளவாக கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பான பகுதிகள். பசித்தால் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் யார் வேண்டுமானாலும் தமிழர் திருமணங்களில் உணவு சாப்பிட்டு விட்டு வரலாம். 

தமிழர் கோயில்கள் இன்னும் ஒருபடி மேலே. ஆதரவற்றவர்கள் பலர் சில கோயில்களில் தங்களைத் தொடர் அறிமுகப் படுத்திக் கொண்டு கோயில் அன்னதானம், பிரசாதங்களாலேயே உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

சர்காரியா கமிசன், சர்கரைப் பேர ஊழல், கோதுமைப் பேரஊழல் என்று திமுகவை அசிங்கப் படுத்தி, ஆட்சியைக் கலைத்து தமிழகத்தில் கலைஞருக்கு அவப்பெயரை இந்திராகாந்தி ஏற்படுத்தியிருந்த போது, 

கலைஞர் தன்னுடைய நாகரீகமான கருத்துப் பரப்புதல்; மூலம், இந்திராகாந்தி, தமிழக மக்களிடம் தனக்கு ஏற்படுத்தியருந்த அவப்பெயரிலிருந்து விடுபடவும், மீண்டும் தமிழக ஆட்சியைப் பிடிக்கவும் அவருக்கு மிகச் சிறப்பாக கைகொடுத்தவைகள் தமிழர் திருமணமேடைகள்தாம்.

அண்மைக் காலமாக கோயில்களின் பாதுகாப்புத் தன்மையை பாஜக, ஹிந்துத்துவா அமைப்புகள் மூலம் தங்களுக்கு களமாகப் பயன்படுத்தி வருகிறது. 

ஒரு தெருநாய் ஒரு வீட்டில் மெல்ல மெல்ல அடைக்கலமாகி அந்த வீட்டு நாய் போல அந்த வீட்டு மிச்ச சொச்ச உணவுகளுக்கு அதிகாரம் பெற்று விடுவதுண்டு. அப்படி அதிகாரம் பெற்று விட்ட நிலையில், வேறு ஒரு நாயும் அந்தப் பக்கம் வந்து விடாமல், அந்த நாய் தன் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளும். 

இப்படி பாஜக ஹிந்துத்துவா அமைப்புகள் தன் அதிகாரத்தை தமிழர் கோயில்களில் அண்மைக் காலமாக நிலைநாட்டி வருகின்றன.

எல்லாக் கோயில்களிலும் பாஜக தன் விளம்பரத் தட்டி சுவரொட்டிகளை தாராளமாக மேய்ப்பாரும் இல்லாமல் தட்டிக் கேட்பாரும் இல்லாமல், பயன் படுத்திக் கொண்டு வருகிறது. 

இந்த நிலையில்தான் நேற்று தமிழர் உணவாதார மீட்பு போராளி அய்யக்கண்ணு அவர்கள், தனது நூறு நாள் கருத்துப் பரப்புதல் பயணத்தில் ஒரு கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோயில்; வளாகத்தில் துண்டறிக்கைகளோடு, மோடியரசின் கேடு கெட்ட ‘தமிழர் உணவாதாரப் பறிப்பு’ நடவடிக்கைளை அம்பலப் படுத்தும், தனது கருத்துப் பரப்புதலை மேற்கொண்டிருந்தார். மோடியரசின் எடுபிடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ப்பெண் நெல்லையம்மாள், பெண்மை, தமிழனம், இரண்டையும் பாதுகாப்பு கவசமாக்கிக் கொண்டு, பெரியவர் அய்யாக்கண்ணுவை அறைந்திருக்கிறார்.

முதலில், தமிழக அனைத்து கோயில்களில் உள்ள, அனைத்து பாஜக ஹிந்துத்துவா விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகளை அப்புறப்படுத்த ‘தமிழ்அறநிலையத்துறை’யும், தமிழக அரசும், உடனடியாக முனைந்திட வேண்டும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.