Show all

தமிழக இளைஞர்கள்! மெரினாவைக் கொடுங்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை நாங்கள் பெற்றுத்தருகிறோம்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி உரிமைக்காக உண்ணாநிலை யெல்லாம் தமிழகத்தை ஆளும் அதிமுக இருக்க வேண்டாம்! 

மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மெரினாவில் போராட அரசு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போராட இளைஞர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர். 

தமிழக மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி உரிமைக்காக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளுடன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காவிரி உரிமையை மீட்க அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்த வேண்டாம். மெரினாவில் போராடுவதற்கு போடப்பட்டுள்ள தடையை மட்டும் விலக்கினாலே போதும், நம்முடைய உரிமைக்காகவும், வேளாண்மையைக் காக்கவும் போராட இளைஞர்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.