24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மதிக்காத தேசத் துரோகி மோடிக்கு கருப்புக் கொடி காட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பை தேசத் துரேக அரசியல் நடத்தும் மோடிக்கு உணர்த்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மோடி தமிழகம் வரும் வியாழன் அன்று கருப்பு உடை, வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற திமுக, மதிமுக, திராவிடர் கழகம், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மற்றும் காங்கிரஸ், தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.