தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளார்கள். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகவெள்ள நிவாரண நிதி வழங்க நடிகர்கள் சிலர் முன்வந்துள்ளார்கள். சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 25 லட்சம் ரூபாயும், விஷால் 10 லட்ச ரூபாயும், தனுஷ் 5 லட்ச ரூபாயும் நடிகர் சங்கத்துக்கு வழங்கியுள்ளார்கள். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.