Show all

தேர்தலில் வாக்களிக்க இயலாமல் வெளிநாட்டில் தங்க வேண்டிய சூழலில் சூர்யா

வணக்கம்,

24 படத்துக்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும் ஆதரவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி.

நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

அதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான்.

 

இதுவரை ஒரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையைச் செலுத்தாமல் நான் இருந்ததே இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல் நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற பயணத்திட்டம் வைத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல் என் பயணத்தைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள இயலவில்லை.

 

என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சல் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை.

மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன்.

 

அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னைப் புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.