Show all

ஸ்டாலின் அதிர்ச்சித் தகவல்: ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஓ.பன்னீர்தான் முதல் குற்றவாளி

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயலலிதா மரண விவகாரத்தில் நான் முன்பே கூறியதை போல், முதல் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம்தான் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இரா.கி.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ஆளும்கட்சியினர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இரா.கி.நகரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றொரு விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில்தான் இந்த பணப்பட்டுவாடாவே நடக்கிறது. இந்த பணப்பட்டுவாடா தொடர்பான அனைத்து காணொளி ஆதாரங்களையும் பென் டிரைவில் நகல் எடுத்து பத்ராவிடம் அளித்துள்ளோம். முன்பு இரா.கி.நகர் தேர்தல் அமைச்சரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 89 கோடியால்தான் ரத்து செய்யப்பட்டது என்பதையும் நினைவுக்கூர்ந்தோம்.

தேர்தலில் நிற்க முடியாது என்பதை அறிந்த அதிமுகவினர் தற்போது பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். நான் அன்று சொன்னது போல் ஜெயலலிதா மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர்தான் என்றார் ஸ்டாலின்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,639

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.