Show all

கண்ணியம் காத்தார் சிவக்குமார்! தான் தட்டிவிட்ட செல்பேசிக்கு மாற்று வழங்கப் பட்டது.

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமாரை மதுரை சிங்காரபுரம்  பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராகுல் என்பவர்  செல்பேசியில் தம்படம் எடுக்க முயன்ற போது நடிகர் சிவகுமார் செல்பேசியைத் தட்டிவிட்டதில் செல்பேசி உடைந்தது.

இந்நிலையில்,  நடிகர் சிவகுமாரின் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள். ஆதனைத் தொடர்ந்து நடிகர் சிவகுமார் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவகுமார் சார்பில் கல்லூரி மாணவருக்கு இன்று புதிய செல்பேசி வழங்கப்பட்டது. சமுக வலைத்தள ஆர்வலர்களுக்கு கல்லூரி மாணவர் ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.