Show all

அடாவடி பேச்சுகளில் ஈடுபட்டு வந்த சடகோபன் ராமானுஜ ஜீயர்! அடங்கினார்

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோடாபாட்டில் வீசவும் தயாராக உள்ளோம் எனக் கூறியதற்காக ஆண்டாளிடமே மன்னிப்புக் கோரிவிட்டதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

தமிழச்சி ஆண்டாள் குறித்து தவறாக கருத்து தெரிவித்ததாக சரியான புரிதல் இல்லாமல், முதலாவதாக பாஜகவின் எச். ராஜா மிக மிக தரம் தாழ்ந்து, படு கேவலமாக, அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாமல், அருவருக்க தக்க சொற்களால், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தார்.

பல்வேறு பாஜக வாழ்மானிகளும் சேற்றை வாரி இறைத்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சோடாபாட்டில் வீசவெல்லாம் தெரியும் என்று அறைகூவல் விடுத்தார். திருவில்லிப்புத்தூரில் வந்து வைரமுத்து அவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என சடகோபன் ராமானுஜ ஜீயர் வலியுறுத்தி வந்தார்.

ஒட்டு மொத்த தமிழகமே வைரமுத்துவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த நிலையில், திருவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜீயர், துறவியர்கள் பேசக்கூடாத வார்த்தைகளைத் தாம் கூறியதற்காக வருந்துவதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆண்டாளிடமே மன்னிப்புக் கோரி விட்டதாகவும் அவர் கூறினார். வைரமுத்து மன்னிப்புக் கோராவிட்டால் பக்தர்கள் பாடு என்று தெரிவித்து ஆண்டாள் விவகாரத்தில் இருந்து ஒதுங்கினார் ஜீயர்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,681

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.