Show all

தொடர்வண்டி மறியல் போராட்டம்! 50 இடங்களில் வியாழனன்று தொடங்க உழவர்கள் சங்கம் முடிவு

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாடு உழவர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் வியாழன் காவிரி கழிமுக மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். 50 இடங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்று சங்கத்தின் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

நடுவண் அரசிடம் தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. இராணுவக் கண்காட்சிக்கு தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும். அதே போல தமிழகம் வரும் நடுவண் அமைச்சர்களுக்கும் கருப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சண்முகம் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,744.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.