Show all

பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் கடன், மற்றும் பற்றுஅட்டைகள் ஏற்கப்படாது

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் கடன், மற்றும் பற்றுஅட்டைகள்; ஏற்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

     பணப்பரிவர்த்தனைக்கு ஒரு விழுக்காடு வரி விதிப்பதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளில் இருந்து தாமதமாக பணம் வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

     பரிவர்த்தனை முடிந்து சுமார் 3 நாட்களுக்கு பிறகே பெட்ரோல் பங்க் உரிமையாளர்க்கு பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

     இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கர்நடாக மாநிலத்திலும் நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளிலும் கடன், மற்றும் பற்றுஅட்டைகள் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.