Show all

கருத்துக் கணிப்புகள் தொடங்கி விட்டன! 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தால் அது யாருக்கு சாதகமாக இருக்கும்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அறங்கூற்று மன்றம் அளித்த தீர்ப்பால், மிக விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ளது. முன்பே இரண்டு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இருபது தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும். 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தால் அது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்று பலதளங்களிலும் கருத்துக் கணிப்பு ஓடத் தொடங்கி விட்டது. 

இந்த நிலையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு இயங்கலை இதழின் கருத்துக் கணிப்பில், திமுகவிற்கு 55.64 விழுக்காட்டினரும், தினகரனுக்கு 14.67 விழுக்காட்டினரும், மக்கள் நீதி மய்யத்திற்கு 7.93 விழுக்காட்டினரும், அதிமுகவிற்கு 6.6 விழுக்காட்டினரும், மற்றவர்களுக்கு என்று 3.3 விழுக்காட்டினரும், யாருக்கும் பலன் தராது என்று 11 விழுக்காட்டினரும், கடைசி இடத்தில் பாஜகவுக்கு என்று 0.86 என்று ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள் வாக்களித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.