Show all

முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு மேலும் பத்து கோடி நதியுதவி

தமிழகத்தில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஜெயா தொலைக்காட்சி சார்பில் பிரபா சிவகுமார் ரூ.5 கோடியும், முருகப்பா குழும நிறுவனத்தின் செயல் தலைவர் ஏ. வெள்ளையன்  ரூ.5 கோடியும் வெள்ள நிவாரண நிதி வழங்கினார்கள்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 96 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரத்து 634 ரூபாய் என்று அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.