Show all

நாஞ்சில் சம்பத் ஆவேசப் பேச்சு: கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்

இலங்கைத் தமிழர்கள், இனப்படுகொலைக்கு காரணமான கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கரூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே பேசியதாவது,

முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

இது தமிழக மக்களுக்கு தெரியும். திமுகவினர் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார். நாவை அடக்கு இல்லை என்றால் அடக்க வேண்டிய நிலை வரும் என்று ஸ்டாலினை நான் எச்சரிக்கின்றேன்.

கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்றார். ஆனால் பழம் நழுவி பாதாளத்தில் விழுந்து விட்டது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும்  இரட்டை இலை சின்னத்தை நிறுத்திய ஒரே இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் கூட இது மாதிரி சம்பவம் நடைபெற்றதில்லை.

முதல்வர் ஜெயலலிதா தனி மனித ராணுவம் போல் தலை நிமிர்ந்து நிற்கிறார். கருணாநிதியின் பிடியில் சிக்கித்தவித்த தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி தலைநிமிர்ந்து நிற்க செய்தார்.

 

 

 

.

காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்து இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டனர்.

இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான கருணாநிதியைச் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.

எனவே வருகின்ற தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வைப்புத்தொகை இழப்பது உறுதி.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். நிகழ்ச்சியின் போது கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் திரளராக கலந்து கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.