Show all

செயலலிதா சட்டப்படி குற்றவாளியில்லை! சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விளக்கம்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தால் செயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், 

அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் தடைவிதிக்கவில்லை யென்பதால், 

செயலலிதாவைச் சட்டபடி குற்றவாளி எனக் கருதமுடியாது என சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் செயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார் என்பதையும் அறங்கூற்றுவர்கள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அடிப்படையில், கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் படாமல் இருந்தால், தற்போது சிறையில் இருக்கும் சசிகலா உள்ளிட்டவர்களும் நிரபராதிகளே. அதிமுகவில் இத்தனை குழப்பங்களும் இல்லை. சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. சட்டத்தின் அடிப்படைகளை, அரசியல் ஆதாயமாக்கிக் கொள்கிறது என்பதுதான் வேடிக்கை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.