Show all

கமல் சொல்லியிருந்த இந்து தீவிரவாதம் உண்மைதான் என்பதாக கீச்சுவில் பகிர்ந்திருந்த வெறிகாணொளி

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுவரொட்டி ஒன்றில் தமது முகத்தை கத்தியால் குத்தி குத்தி கிழிக்கும் கொலை வெறியூட்டப்பட்ட சிறுவனின் காணொளியை முன்வைத்து கீச்சுவில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கமல்ஹாசன்

இன்று இரவு தமது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு இது: என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.