Show all

கோர விபத்தில், நீதிபதி பிரகாஷ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்

கரூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நீதிபதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மற்றும் அவரது நண்பரும் மருத்துவரான பிரதீப் குமாரும் மதுரைக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். அரவக்குறிச்சியை அடுத்த புங்கம்பாடி பிரிவு சாலையில் சென்ற போது காரின் டயர் வெடித்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு எதிரே, வேடசந்தூரில் இருந்து கொடுமுடிக்கு சென்ற கார் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில், நீதிபதி பிரகாஷ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மற்ற 3 பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் வேடசந்தூரை அடுத்த கேதை அரும்பு என்ற இடத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நீதிபதியின் காரை ஓட்டி வந்த மருத்துவர் பிரதீப்குமார் உள்பட 5 பேர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.