Show all

மனித சங்கிலி! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அனைத்து கட்சிகளின் அடுத்த போராட்டம்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் காவிரி வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக அறிவித்துள்ளது. அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் 6 நாட்கள் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை ஸ்டாலின் நடத்தினார். இந்நிலையில் அண்ணா அறிவாயலத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அடுத்த கட்டப் போராட்டமாக வரும் திங்களன்று மனித சங்கிலி பேராட்டம் நடத்துவது, என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,759.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.