Show all

மோடியை விளாசிய பிரவீன் தொகாடியா! மகள்கள் பாதுகாப்பாக இல்லை, தலைமை அமைச்சர் வெளிநாடு பயணிக்கிறார்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக தமிழ்தொடர்ஆண்டு-5111ல் (2009) இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க வில்லை.

இந்த முறை மோடி விடப் பிடியாக அழைக்கப் பட்டிருக்கிறார். பொதுநலவாயம் (காமன்வெல்த்), எனப்படுவது, முன்னாள் பிரித்தானியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்த, 53 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பன்னாட்டிடை அமைப்பாகும்.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. 

தமிழ்தொடர்ஆண்டு-5051ல் (1949) வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பினர் நாடுகள் 'கட்டற்றவை மற்றும் சமமானவை' என்று நிறுவப்பட்டது. இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக அரசி எலிசபெத்  பொதுநலவாயத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். பொதுநலவாய இராச்சியம் என அறியப்படும் 16 உறுப்பினர் நாடுகளில் எலிசபெத் நாட்டுத் தலைவர் தகுதியில் அரசியும் ஆவார். 32 உறுப்பினர் நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது.

பொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும், பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டும் செயல்படுகிறது.

உறுப்பினர் நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள், மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்று கூடியுள்ளன. இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த, காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மிக அண்மையில் விலகிய நாடாகும்.

பொதுநலவாய நாடுகள் அனைத்துக் கண்டங்களிலும் உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தை, கொண்டுள்ளன. இந்த நாடுகளின் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும். மொத்த  உற்பத்தி உலக உற்பத்தியில் 17விழுக்hடு ஆகும். இந்த அமைப்பு நடத்தும் விளையாட்டுப்; போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தவுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமன்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்கப்;;; போகிறது.

இந்த காமன் வெல்த் நாடுகளின் மாநாட்டிற்கு தான் நம்ம மோடி, மோடிக்கு கட்டுப் பட்ட எடப்பாடி- பன்னீர், போல கார்ப்பரேட்டுகளுக்கு கட்டுப் பட்டு, பாஜகவினரால் பாதிக்கப் பட்ட மகள்களை யெல்லாம் விட்டு விட்டு வெளிநாடு பயணமாகிறார் மோடி.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு 'பொதுவான எதிர்காலத்தை நோக்கி' என்னும் தலைப்பில் வருகிற புதன் முதல் வெள்ளி முடிய நடக்கிறது. இதில் நம்;ம மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,759.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.