Show all

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்: தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்போலோ விரைந்தனர். கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆளுநரின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் “முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலம் அடைந்து வருகிறார் முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்” என்று கூறியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.