Show all

வலைத்தளத்தில் அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை விமர்சித்த வகைக்காக அரசு ஊழியர் கைது

சமூக வலை தளங்களில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் சுடச்சுட பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் பற்றியும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் பெருங்களத்தூரை சேர்ந்த 60 அகவையுடைய ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக உத்தரவிட்ட அறங்கூற்றுவர் கிருபாகரனை விமர்சனம் செய்துள்ளார் போலும்.

இதுபற்றி சென்னை நடுவண் சுழி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பான பதிவுகளை தனது முகநூல் பக்கத்தில் சுபாஷ்சந்திர போஸ் பதிவு செய்திருந்ததாக இன்று காலை சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டார்.

இவர் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பில் நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்துள்ளாராம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.