Show all

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை

கறுப்புப் பணத்தை ஓழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் நடுவண் நிதி அமைச்சகம் சரியாகத் திட்டமிடவில்லை. ஆனால் அதை சரி செய்ய நடுவண் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

     ஜல்லிகட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை நீதிமன்றம் அளிக்குமென எதிர் பார்ப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை என எனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில், நீதிமன்றம் கட்டுப் பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்க வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.