Show all

மக்கள் நீதி மய்யத்தில் விரும்பி இணைகிறார்களா? இன்று ஹெச்.ராஜாஷர்மா! நேற்று தமிழிசை

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பூரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய தமிழிசை, நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு மின்அஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். என்று கமலைக் கலாய்த்து இடைவிடாமல் சிரித்தார் தமிழிசை. இதனையடுத்து தங்கள் இணையதளத்தில் செல்பேசி எண், மின்அஞ்சல் மற்றும் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட விவரங்களை அளித்து தமிழிசை பதிவு செய்ததற்கான புகைப்பட ஆதாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி கீச்;சுவில் வெளியிட்டது. 

தற்போது ஹெச்.ராஜாஷர்மாவும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தனக்கு மின்அஞ்சல் வந்திருப்பதாக கீச்சிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ‘மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான் போல’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அவருக்கு வந்துள்ள மின் அஞ்சலில் அவரின் முழுப்பெயரான ஹெச்.ராஜா ஷர்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் இணைந்ததற்கான தகவல் அனுப்பப்படும் என்று நேற்று மக்கள் நீதி மய்யம் ஆதரங்களுடன் விளக்கம் கொடுத்த பின்னரும் ஹெச்.ராஜாஷர்மா இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். ‘மக்கள் நீதி மய்யத்தில் சேர உங்கள் அட்மின் பதிவு செய்திருப்பார்’ என்று இணைய ஆர்வலர்கள் கலாய்த்து வருகின்றனர்.

உலகத் தமிழ் மக்கள், தங்கள் கலாய்ப்பிற்கு முதல்தர கோமாளிகளாக எடுத்துக் கொண்டிருப்பது தமிழிசையையும், எச்.ராஜாஷர்மாவையையும்தான் என்கிற நிலையில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் வடிவேல் நகைச்சுவை மாதிரி    மீண்டும் மீண்டும், வந்து வந்து சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,726.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.