Show all

இராதாகிருட்டினன் நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவது உறுதி: புகழேந்தி

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், இராதாகிருட்டினன் நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்கிறார் புகழேந்தி

இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, ‘எங்கள் தரப்பு வாதங்களை உரிய முறையில் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை. நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களையும் பார்வையிடவில்லை. நாங்கள் எங்கள் தரப்பு வாதங்களைத் தொடர்ந்து வைத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்க முடியாது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.

மேலும், இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், இராதாகிருட்டினன் நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார். என்கிறார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.

தினகரன் இராதாகிருட்டினன் நகர் தெகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அமைந்து விட்டால் என்ன செய்வது என எடப்பாடி பழனிச்சாமி வேறுவகையாகவே காய் நகர்த்துவார். என்று தினகரன் அணியினர் அச்சத்தில் இருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.