செயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர் அம்மா தீபா
பேரவையை ஏற்படுத்திய தீபா, அதற்கான நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். பேரவைத் தலைவராக ஆர்.சரண்யாவையும், மாநிலச் செயலாளராக ஏ.வி.ராஜாவையும், நியமித்தார்.
பின்னர் பேரவையின் பொருளாளராக தானே செயல்படுவேன்
என்றும் தெரிவித்திருந்தார். தி.நகரில் உள்ள தீபா வீட்டில் செய்தியாளர்களைத்
தீபா இன்று சந்தித்தார். அப்போது தீபா பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சரண்யா
யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சரண்யா தனது தோழி என்று தீபா தெரிவித்தார். இதுகுறித்து தீபா மேலும் கூறுகையில், பேரவையின்
தலைவராகவும், மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள சரண்யாவும், ராஜாவும் எனது தோழர்கள்
என்றார் அவர். செயலலிதாவுக்கு சசிகலா என்ற ஒரு தோழி கிடைத்தது போல் தீபாவுக்கும் சரண்யா
என்ற ஒரு தோழி கிடைத்திருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.