Show all

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெளிவு! கல்லூரி நிர்வாகம் ராகுலை பாஉவாக அழைத்தது விதிமீறல் ஆகாது

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்க உள்ளது. இதற்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் கருத்துப்பரப்புதல், கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. நான்கு நாட்களுக்கு முன்பு தேர்தல் நளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதுமுதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த புதன்கிழமை நாகர்கோவிலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வந்தார் ராகுல். சென்னை வந்த அவர் அதற்கு முன்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3000 மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த ராகுல்: பணமதிப்பு நீக்கம், ரஃபேல் விமானக் கொள்முதல், மோடியின் மீதான விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார்.

அவரது பேச்சும், பதிலளித்த விதமும் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அவரது பதில் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அதிமுக கூட்டணியினர், தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்த பின்னர் பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கருத்துப் பரப்புதல் செய்யக்கூடாது என்கிற நடத்தை விதியை மீறியதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து பதிலளித்த அவர் வேறு நிகழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டுவிட்டு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தினாலோ, அல்லது ஓர் அரசியல் கட்சி கல்லூரியில் பேசினாலோ விதிமீறல் ஆகும். இந்த நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகம் ராகுலை பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அழைத்துள்ளது. அது விதிமீறல் ஆகாது என தெரிவித்தார்.

ஆனாலும் கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் இரா. சாருமதி சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில், கடந்த புதன் கிழமை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர் கலந்துகொண்டதாக இதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ள நிலையில், எவ்வாறு இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்கிற விவரத்தினை உடனடியாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டு இவ்வலுவலகத்திற்கு வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி! இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி அதுகுறித்து பதிலளித்த அவர் வேறு நிகழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டுவிட்டு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தினாலோ, அல்லது ஓர் அரசியல் கட்சி கல்லூரியில் பேசினாலோ விதிமீறல் ஆகும். இந்த நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகம் ராகுலை பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அழைத்துள்ளது. அது விதிமீறல் ஆகாது என தெரிவித்ததும் செய்தி இதழ்களிலும், ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறதே அதை கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் இரா. சாருமதி படிக்கவோ, பார்க்கவோ கூடாது என்று அவருக்கு யாரெல்லாம் அறிவுறுத்தினார்கள் என்று மக்கள் குழம்புகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.