Show all

சென்னை மாணவிக்கு தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ஆலப்பாக்கம் ஸ்ரீதேவி நகரில் வசிக்கும் சுகுமார்- சரண்யா தம்பதியினர் மகள் ஹர்ஷிதா அகவை10, இவர் மதுரவாயிலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இளம் வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றவர். ஏற்கெனவே நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

ஹரியாணாவில் தேசிய அளவில் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஹர்ஷிதாவிற்கு கிடைத்தது. இந்தியாவில் மாநில அளவிலான மண்டல போட்டியில் பெற்றி பெற்றவர்களுக்கு தேசிய அளவிலான போட்டி நேற்று ஹரியாணாவில் தொடங்கியது.

இதில் தென்மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், ஆகிய இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் , மற்றும் குவைத், வளைகுடா நாடுகள், யூனைடட் அரப் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவ மாணவியர் நீச்சல் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா இறுதிப் போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

இதன்மூலம் பள்ளி மாணவிகளுக்கான போட்டியில் இந்தியாவில் இரண்டாம் பிடித்த மாணவி என்ற பெருமையை ஹர்ஷிதா பெற்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.