Show all

பா.ஜ.க தேசிய செயலர் ராஜா உருவ பொம்மை எரிப்பு

பா.ஜ.க தேசிய செயலர் ராஜா உருவ பொம்மையை, பெண்ணாடத்தில் காங்கிரசு கட்சியினர் எரித்தனர். பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில், காங்கிரசு வட்டார தலைவர் கந்தசாமி தலைமையில், பா.ஜ.க, தேசிய செயலர் ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

     அப்போது, காங்கிரசு தலைவர் சோனியாவை தவறாக விமர்சித்த ராஜாவை கண்டித்து, அக்கட்சியினர் முழக்கமிட்டனர் தகவலறிந்து வந்த பெண்ணாடம் காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

     இதனால், பெண்ணாடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சிதம்பரத்திலும் இதே போன்று, மாவட்ட காங்கிரசு சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், விஸ்வநாதன், மாவட்ட பொதுச் செயலர் நசீர் அகமது, துணைச் செயலர் ஆறுமுகம், ஞானம், வெங்கடேசன், புவனேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

     பாஜக ராஜாவுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.