சென்னிமலை பகுதியில், நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகள்
மூடப்பட்டதால், குடிகாரர்கள் மது வாங்க அலைமோதினர். சென்னிமலை வட்டாரத்தில், 16 டாஸ்மாக்
கடைகள் செயல்பட்டன. உச்ச நீதிமன்ற ஆணைக்கேற்ப, பேருந்து நிலையம், அப்பாய் செட்டியார்
வீதி, பாலமுருகன் திரையரங்கம் பேருந்து நிறுத்தம், நாளங்காடி எதிரில், பிடாரியூர்,
பசுவபட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் இருந்த ஆறு கடைகள் நேற்று மூடப்பட்டன. சென்னிமலை
நகரில், அரச்சலூர் மற்றும் ஊத்துக்குளி சாலைகளில், இரண்டு கடை மட்டுமே தற்போது உள்ளன.
ஆறு கடைகளை மூடியதால், இந்தக் கடைகளில் குடிகாரர்கள் குவிந்தனர். அவர்களிடையே தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.