Show all

தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை: அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் உதவி தேவையில்லை என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, அதிமுகவின் வாக்கு வங்கியே மதுசூதனன் வெற்றி பெற போதுமானது. தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என்றார்.

இந்தப் பேச்சுக்கு பாஜகவிடம் அனுமதி வாங்கியிருப்பார்கள்! இல்லா விட்டால் அதிமுகவிற்கு இவ்வளவு துணிச்சல் ஏது? என்று சிரித்துக் கொள்கிறார்கள் அதிமுக வட்டாரத்திலேயே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.