Show all

அதிமுக! மக்கள் மன்றத்தில் மீட்கப்படும் வரை, தினகரன்அணிக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனப் பெயராம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் இராகிநகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன்- ‘யார் அதிமுக’ என்பதற்கான மக்கள் கருத்தறிய தனது தலைமையின் கீழ் இயங்கப் போகிற அணிக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வௌ;ளை இடையே செயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் மீட்டெடுக்க அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் கட்சியின் பெயரும், கொடியும் அறிமுகம் செய்யப்படும் என தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தனது அணியின் பெயரை அவர் அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என பெயர் சூட்டியுள்ளார்.

மேலூர் பொதுக்கூட்டத்துக்கு கணிசமான அளவு தொண்டர்களையும்  தினகரன் திரட்டியிருக்கிறார். காலை 7 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கிய நிலையில், சரியாக 10.30 மணிக்கு அவர் விழா மேடைக்குவந்து கட்சியின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அணியின் பெயரை அறிவித்த தினகரன், புதிய பெயருடனும் கொடியுடனும் இனிவரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதேவேளையில், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம். அதுவரை குக்கர் சின்னத்தை பயன்படுத்துவோம் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து அதில் அண்மையில் வெற்றியும் அடைந்தார் தினகரன்.

இராகிநகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தினகரன் தரப்பில் டெல்லி உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த வௌ;ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

குக்கர் சின்னத்தை உள்ளாட்சித் தேர்தலுக்காக வென்ற கையோடு அதிமுக கட்சி, சின்னம் மீட்;புக்காக தனது தலைமையின் கீழ் இயங்கப் போகும்; அணிக்கு பெயர் அறிவிப்பையும், கொடியையும் தினகரன் அறிவித்திருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,727.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.