Show all

சமூக வலைதளத்தில் செய்த ஒட்டல்வெட்டல் வேலைக்காக உசிலம்பட்டி இளைஞர் அலெக்ஸ்பாண்டியன் கைது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தந்திருந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடியார் உள்ளிட்டோர் வரவேற்றனர். சமூக வலைதளங்களில் மோடியுடன் முதல்வர் எடப்பாடியார் கை குலுக்கும் படங்களில் வெட்டல் ஒட்டல் செய்யப்பட்டிருந்தது. அதாவது மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடியார் சட்டைப் பையில் வழக்கமாக இருக்கும் செயலலிதாவின் படத்துக்கு பதில் மோடியின் படம் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறையில் கன்னியாகுமரி காவல்துறையினர் புகார் கொடுத்தனர். இப்புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.