Show all

மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நினைவுப் பரிசு அளித்தார்

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா அழகான நினைவுப் பரிசு ஒன்றை அளித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி நெசவாளர் தின விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வருகை தந்த மோடிக்கு, மதிய விருந்தளிக்கப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் நினைவாக, குழலூதும் கண்ணன் சிற்பத்தை முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.