Show all

187 நாடுகளை வரவேற்றுக் கொண்டாடும் தமிழ்நாடு! நாற்பத்தி நான்காவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி

தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சதுரங்க ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் முதல் முறையாக, அதுவும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சதுரங்க ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கி உள்ளனர். முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர் தீவைச் சேர்ந்த வீரர்கள் வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கேரி, ஜாம்பியா நாட்டு அணிகள் வந்தன. 

மற்றும் தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஆங்காங், வேல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, வியாட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வந்தனர். 

உகாண்டா, கோஸ்டாரிகா, மேகன்தீவு, கஜகஸ்தான், கயானா, தான்சானியா, போலந்து, எஸ்டோனியா, பல்கேரியா, செர்பியா, சோமோரோஸ் தீவு உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் இன்று அதிகாலையில் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்றனர். 

தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் தங்கும்விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று இரவுக்குள் செக்குடியரசு, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, பார்படோஸ், உக்ரைன், பப்புவா நியூ கினியா, ஈரான், கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 31 வீரர், வீராங்கனைகள் வருகிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,320.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.