இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 131 (123) ரன்களும், மேக்ஸ்வெல் 48 (37) ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் புவுனேஷ்வர் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (43), ஷிகர் தவான் (32), ராயுடு (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து சிறப்பாக விளையாடிய கோலி 104 ரன்களில் வெளியேறினார். இது அவரது 39வது ஒரு நாள் சதம் ஆகும். இறுதியில் இந்திய அணி 49.2வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி (55) மற்றும் கார்த்திக் (25) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.