Show all

நலமடைய வாழ்த்துவோம்! சாலை விபத்தில் மோடியின் மனைவி படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் படுகாயம் அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளார்.

யசோதாபெனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,691

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.